Posts

Showing posts from 2016

ராஜராஜ சோழனிடம் நான் வியந்தது

Image
1000 வருடங்களுக்கு முன் தென்னிந்தியாவை ஆண்ட மிக பெரிய சாம்ராஜ்யத்தின் அரசன் ஏன் வடஇந்தியாவை நோக்கி படையெடுக்காமல், சிவனுக்கு மிகப்பெரிய ஆலயம் கட்டினான்? என்ற கேள்வி பலருக்கும் எழலாம். . ராஜராஜ சோழனின் ஆட்சி காலம் (985–1014) தான் தமிழ் வரலாற்றின் பொற்காலம். பொருளாதாரம், கட்டிடக்கலை, சிற்பக்கலை, வணிகம், நாகரிகம், விவசாயம், கலாச்சாரம், உணவு முறை, போர்ப்படை என்று அனைத்திலும் சோழ தேசம் மற்ற தேசத்தை காட்டிலும் பல மடங்கு முன்னேறி இருந்தது. . தென்னிந்தியா முழுவதையும் தன் குடைக்கீழ் கொண்டு வந்த சோழனுக்கு தன் நாட்டின் வளர்ச்சியையும் நாகரிகத்தையும் காலத்தால் அசைக்க முடியாதபடி வரலாற்றில் பதிவு செய்ய வேண்டும் என்று ஒரு ஆசை. அந்த ஆசையின் முழு வடிவமே இன்று உலகம் வியக்கும் க்ரானைட் கற்களால் கட்டப்பட்ட தஞ்சை பெரிய கோவில். இந்த பதிவு கோவில் கட்டப்பட்ட தொழில்நுட்பத்தை பற்றியது அல்ல; அதை விட மிக கடினமான மற்ற துறைகளை பற்றியது.. தஞ்சை பெரிய கோவில் தன் காலத்தில் இருந்த மற்ற கோவில்களை விட 40 மடங்கு பெரிய கோவில். கோவில் கட்டுமானத்தில் மரம் இல்லை. சுடு செங்கல் இல்லை, பூராங்கல் இல்லை, மொத்தமும் நீ

தமிழர்களும் செவ்விந்தியர்களும் (மாயன்)(Mayans, Incas)

Image
உலக நாகரீகங்களுடனான நம்முடைய தொடர்பு.இன்று உலகமே Mayan என்கிற வார்த்தையை அறிந்திருக்கிறது. Mayan Calendar-யை வைத்து உலகம் முழுவதும் இன்று பரபரப்பு கிளப்பப்பட்டது. 2012-ல் உலகம் அழிந்திவிடலாம் என்கிற புனைவுகளும் தொலைக்காட்சி மர்மத் தொடர்களால் முன்னெடுக்கப்படுவந்தன. Mayan-கள் யார் என்றுத் தெரியாதவர்கள் கூட Mayan என்கிறப் பெயரை உச்சரித்தார்கள். தமிழ் நாட்டின் முன்னோடித் தமிழ் தொலைக்காட்சி நிறுவனங்கள் அனைத்தும் Mayan Calendar பற்றிய நிகழ்ச்சிகளை வெளிநாட்டு தொலைக்காட்சி நிறுவனங்களிடமிருந்து பிச்சையெடுத்து, தமிழ் படுத்தி கட்டைக் குரல்களில் உலக அழிவைப் பற்றி பேசுசின. வரலாற்று அறிவு கொஞ்சம் கூட இல்லாத நம்முடைய தமிழ் தொலைக்காட்சி நிறுவனங்கள் Mayan தொடர்பான வரலாற்று நிகழ்ச்சிகளை ஒலிபரப்பியது அபத்தம். மாயன்,Omlec, Aztec, Mayan, Inca இவைகள் வட மற்றும் தென் அமெரிக்க கண்டங்களில் வாழ்ந்த மக்களுடைய நாகரீகங்களின் பெயர்கள். இவர்களை வெள்ளையர்கள் செவ்விந்தியர்கள் என்று பொதுபட அழைத்தார்கள். ஆங்கிலேயர்கள் இவர்களை செவ்விந்தியர்கள் என்று அழைத்ததற்கு வரலாற்று பின்னனி உண்டு. கி.பி. 14, 15 ஆம் நூற்றாண்டுக

பிரமிடு என்பதும் தமிழ்ச் சொல்லே !

Image
ஒரு வியப்பான செய்தியை கூறினால் நீங்கள் வியப்பால் விழி விலகி நிற்பீர்கள்! எகிப்தில் உள்ள " பிரமிடு " தமிழர் கட்டியது என்பது மட்டுமல்ல , அச்சொல்லே தமிழ்ச் சொல்லாகும். கி.மு - 3113 : அமெரிக்க- தமிழினத்தவராகிய மாயர்கள் தொடங்கிய மாயன் ஆண்டுக் கணக்கு ஆரம்பம். கி.மு - 2600 : எகிப்திய தமிழினத்தவராகிய மாயர்களால் பிரமிடுகள் வேலை ஆரம்பம். "இடுதல்" என்றால் புதைத்தல் என்று பொருள். இறந்தவர்களை புதைப்பதால் 'இடுகாடு' என்று அழைக்கப் பட்டது. சாதாரண மக்கள் இறந்தால் சிறு குழியில் புதைத்து மேலே மேடு அமைப்பர் . அது "சிறு இடு". மன்னர்கள் போன்ற உயர்ந்தோர் இறந்தால் "பெரும் இடு" அமைப்பர். பெரும் + இடு = பெருமிடு . அதுவே "பிரமிடு " என்று எகிப்தில் அழைக்கப் படுகிறது. தமிழர்கள் உலகின் பல பாகங்களில் வாழ்ந்தவர்கள் என்பது மட்டுமல்ல. பல மொழிகள் தோற்றத்திற்கு காரணமாய் அமைந்து, பல மொழிகளுக்கும் பல சொற்களை கொடையாகவும் அளித்துள்ளது. இது ஒருபுறம் இருக்க உலகின் தொல் நாகரீகமே தமிழர்களுடையது தாமிரபரணி ஆற்றின் கரையில் ஆதிச்சநல்லூர் என்ற ஊர் இதற்கு ச

பழைய இந்து - சீனத்து நாணயத்தாள்

Image
இது வெளியிடப்பட்ட ஆண்டு தெரியவில்லை. இதில் 5 என்பது தமிழ் எண்ணிலும் குறிப்பிடப்பட்டுள்ளதை காணலாம். #Credit:  https://www.facebook.com/tamilnationality/photos/a.1031076660246827.1073741828.1030820220272471/1234585596562598/?type=3&theater

திருச்செந்தூர் முருகன் கோயில் - ஒரு கட்டிடக் கலை அதிசயம்

Image
தென் தமிழகத்தின் கடைக்கோடியில் உள்ள அசுரரையும், சுனாமியையும் வென்ற திருச்செந்தூர் முருகன் கோயில் - ஒரு கட்டிடக் கலை அதிசயம் !. பொதுவாக யாரும் கடற்கரையை ஒட்டி பெரிய கட்டிடங்கள் கட்டுவதில்லை. கடற்கரைப் பகுதிகளில் நிலத்தடி நீர்மட்டம் தரைக்கு மிக அருகில் இருக்குமாதலால் இங்கு கட்டப் படும் கட்டிடங்கள் விரைவில் பலவீனமாகி விடும். அப்படியே கட்டினாலும் தரை மட்டத்திலிருந்தும் கடல் மட்டத்திலிருந்தும் உயரமான மேடைகளை அமைத்து அதன் மேல்தான் கட்டுவார்கள். ஆனால், திருச்செந்தூர் முருகன் கோயில் கடற்கரையிலிருந்து வெறும் 67 மீ தொலைவில் அமைக்கப்பட்டுள்ளது. 133 அடி உயரமுள்ள இந்த திருக்கோயிலின் ராஜ கோபுரம், கடற்கரையிலிருந்து 140மீ தொலைவில்தான் அமைந்துள்ளது. எல்லாவற்றையும் விட பெரிய வியப்பு இந்த கோயிலின் கருவறை. இது தரை மட்டத்திலிருந்து 15 அடியும், கடல் மட்டத்திலிருந்து 10 அடியும் தாழ்வான இடத்தில் கட்டப்பட்டுள்ளது !. திருச்செந்தூர் விவரங்கள் தொல்காப்பியம், புறநானூறு, அகநானூறு, திருமுருகாற்றுப்படை சிலப்பதிகாரம் போன்ற சங்ககால இலக்கியங்களில் காணப்படுவதை நாம் கருத்தில் கொண்டால், இந்த கோயில் கட்டப

இலங்கை பூர்வகுடி தமிழர்கள்...

Image
வட இந்தியாவில் இருந்து இலங்கைக்குச் சென்ற விஜயன் என்ற இளவரசன்தான், முதல் சிங்கள அரசை நிறுவியவன் என்று, சிங்களரின் வரலாற்று நூலான மகாவம்சம் கூறுகிறது. இந்தியாவின் இதிகாசங்களான "ராமாயணம்'', "மகாபாரதம்'' போன்றது பாலி மொழியில் எழுதப்பட்ட "மகாவம்சம்'' என்ற நூல். இதை தங்களின் வேத புத்தகம் போல சிங்களர்கள் மதிக்கிறார்கள். இதை தங்கள் "வரலாறு'' என்று சிங்களர்கள் கூறினாலும், நம்ப முடியாத கட்டுக் கதைகளும் இதில் உண்டு. விஜயன் இலங்கையில் சிங்கள வம்சத்தை தோற்றுவித்தவன் - இலங்கையின் முதல் சிங்கள மன்னன் விஜயன் என்று மகாவம்சம் கூறுகிறது. விஜயன் பற்றி மகாவம்சத்தில் பின்வருமாறு கூறப்பட்டுள்ளது:- "வட இந்தியாவில் உள்ள வங்காளம், ஒரிசா ஆகிய பகுதிகள் ஒரு காலத்தில் லாலாதேசம் என்று அழைக்கப்பட்டது. இந்த ராஜ்ஜியத்தை ஆண்ட மன்னன் பெயர் சிங்கபாகு. இவர் சிங்கத்துக்கும் ஒரு ராஜகுமாரிக்கும் பிறந்தவர்! பிற்காலத்தில் இவருக்கு உண்மை தெரிகிறது. ஒரு குகையில் இருந்த சிங்கத்தை (தன் தந்தையை) கண்டுபிடித்து தலையை வெட்டி துண்டிக்கிறார். சிங்கபாகு, சிகாசிவ

Tamil History - Series- Trailer | தமிழர் வரலாறு - தொடர்- முன்னோட்டம் |ஆம...

Image

பத்தாயிரம் போர்க்கப்பல்கள் நின்றிருந்த - காவிரிபூம்பட்டினம்!

Image
"காவிரிப்பூம்பட்டினம்" - கடலுக்கடியில் கண்மூடிக்கிடக்கும் நம் வரலாற்றைத் தேடி ஒரு பயணம் ! கலை, இலக்கியம், வீரம், கொடை, பண்பாடு, நாகரீகம், போன்ற பலவற்றை இந்த உலகிற்கே கற்றுத்தந்த நம் தமிழ் இனம், இன்று தன் வரலாற்றையே மறந்து மேல் நாட்டு மோகத்தில் தான் கடந்து வந்த பாதைகளை திரும்பிப் பார்க்காமல் சென்று கொண்டிருப்பது வேதனைக்குரிய விடயம்!. ஆனால் வரலாறு என்பது ஒரு வட்டம் தான், ஒரு காலத்தில் இந்த உலகையே ஆண்ட நாம், இன்று உலகிற்கு அடிமையாய் இருக்கிறோம், மீண்டும் இந்த கால சக்கரம் சுழன்று நம் பெருமைகளை இந்த உலகம் பேசும் நாள் வெகு தொலைவில் இல்லை என்ற நம்பிக்கையுடன், நம் சோழ துறைமுக தலை நகருக்கு உங்களை அழைத்துச் செல்கிறேன்.நம் முன்னோர்களின் வரலாற்றை தெரிந்து கொள்ள கடலோடு பயணிப்போம் வாருங்கள் !! தமிழகத்தில் 99% பெயர்கள் காரணப் பெயரால் அமைந்தவை என்பது அனைவரும் அறிந்த ஒன்று. அந்த வகையில் வந்த பெயர் தான் இந்த "காவிரிப்பூம்பட்டினம்". பல ஊர்களின் மக்களை வாழவைத்தது போக மீதமுள்ள தண்ணீரை கூட கடலுக்கு தந்து விடும் காவிரி ஆறு கடலில் சங்கமிக்கும் இடத்தின் அருகில் அமைந்தது தான் இந்

Dr. Abdul Kalam's inspiring speech at Sivananda Saraswathi Sevashram

Image

அப்துல் கலாம் - ஒரு சகாப்தம்

Image
இந்தியா-பாகிஸ்தான் இடையே 1971 ஆம் ஆண்டு டிசம்பரில் வங்கதேஷ் போர் நடந்து கொண்டிருந்தது. அப்போது பாகிஸ்தானுக்கு ஆதரவாக செயல்பட்ட அமெரிக்கா. இந்தியாவை மிரட்டும் நடவடிக்கையாக இந்தியாவை நோக்கி தனது போர்க்கப்பல்களை அனுப்பியது. ஆனால் அவை வந்து சேருவதற்குள்ளாக இந்தியப் படைகள் பாகிஸ்தான் படைகளை சரணடையச் செய்தன. போரே முடிந்து விட்டது. மூக்கறுபட்டது போல அமெரிக்கப் போர்க் கப்பல்கள் வந்த வழியே திரும்பிச் சென்றன. அக்கால கட்டத்தில் இந்தியாவிடம் அணுகுண்டுகள் கிடையாது. அவற்றைச் சுமந்து செல்வதற்கான ஏவுகணைகள் கிடையாது. அமெரிக்கப் போர்க்கப்பல்களின் நடமாட்டத்தை வானிலிருந்து கண்காணிக்க இந்தியாவிடம் செயற்கைக்கோள்கள் கிடையாது. செயற்கைக்கோள்களைச் செலுத்துவதற்கான ராக்கெட்டும் கிடையாது. அன்றைய நிலையுடன் ஒப்பிட்டால் இந்தியாவிடம் இப்போது அணுகுண்டுகளை சுமந்தபடி 8000 கிலோ மீட்டர் பறந்து சென்று எதிரி இலக்குகளை தாக்க வல்ல நீண்ட தூர ஏவுகணைகள் உள்ளன. அவற்றை இலக்கு தவறாமல் தாக்குவதற்கு உதவும் ஜிபிஎஸ் வகை செயற்கைக்கோள்கள் உள்ளன. எதிரிப் படைகளின் நடமாட்டத்தை வானிலிருந்து கண்காணிக்க செயற்கைக்கோள்கள் உள்ளன. எதிர

பெருந்தலைவர் காமராஜ்

Image
ராஜாஜி நிதிப்பற்றாக்குறையைக் காரணமாகக் காட்டி, 6000 ஆரம்பப் பள்ளிகளை இழுத்து மூடினார். அடுத்தச் சில மாதங்களில் ஆட்சிக்கு வந்தார் காமராஜ். அதுதான் அவர் முதன்முதலாக ஆட்சியில் அமர்வது. ஆட்சியில் இருந்த ராஜாஜி,அரசாங்கத்திடம் பணமில்லை என்று கூறி இழுத்து மூடிய 6000 பள்ளிகளைச் சிலமாதங்களில் ஆட்சிக்கு வந்த காமராஜ் மீண்டும் திறக்கும்படி உடனடியாக ஆணையிட்டார். அத்தோடு நில்லாமல் 14000 புதிய பள்ளிகள் கட்ட உத்தரவிட்டார். படிக்க வரும் மாணவர்கள் பட்டினியாக இருக்கக் கூடாதென்று உணவும் அளிக்கத் திட்டம் தீட்டி நிறைவேற்றினார்! நிதிப் பற்றாக்குறை, அரசாங்க கஜானா காலி என்று ராஜாஜி தமிழகத்தைப் பிச்சைக் கார மாநிலமாக முன்னிருத்தினார். ஆனால், அடுத்து ஆட்சிக்கு வந்த காமராஜ் அதே பிச்சைக்காரத் தமிழகத்தை இந்தியாவிலெயே தொழில் வளர்ச்சியில் இரண்டாவது மாநிலமாகக் கொண்டுவந்து நிறுத்தினார்! 1.நெய்வேலி நிலக்கரித் திட்டம் 2.பெரம்பலூர் ரயில்பெட்டித் தொழிற்சாலை 3.திருச்சி பாரத் ஹெவி எலெக்ட்ரிகல்ஸ் 4.ஊட்டி கச்சா பிலிம் தொழிர்சாலை 5.ஆவடி கனரக வாகன தொழிற்சாலை 6.கல்பாக்கம் அணுமின் நிலையம் 7.கிண்டி டெலிபிரின்டர் தொழி

சுமார் நூறு ஆண்டுகள் முன்பு , ஸ்ரீரங்கத்தின் ராஜ வாயில்.

Image
இன்று பெட்டி கடைகளில் காணாமல் போன திருவரங்கத்தின் எழில் கொஞ்சும் அமைதி. Credit :  https://www.facebook.com/myTrichy/photos/a.481120148762.257950.303391638762/10153823076143763/?type=3&theater

ஏறுதழுவுதல் - தமிழரின் வரலாறு

Image
தமிழரின் வரலாறு என்ன என்று தெரிய வேண்டும்! தெரியாமல் பேச கூடாது Ban PETA! ஏறுதழுவுதல், ஏறுகோள், மாடுபிடித்தல், ஜல்லிக்கட்டு, மஞ்சுவிரட்டு, பொல்லெருது பிடித்தல் என்று தமிழகத்தின் பல பகுதிகளில் பல பெயர்களில் தமிழர்களின் வீர விளையாட்டாம் ஏறுதழுவுதல் அழைக்கப்பெறுகிறது. இவ்விளையாட்டு,முல்லை நில (ஆயர்கள்) மக்களின் திருமணத்துடன் தொடர்புடையதாகப் பண்டைக்காலத்தில் இருந்தது. முல்லைநில மக்களின் வீரவிளையாட்டாக இருந்தாலும் தென் தமிழகத்தின் மதுரை மாவட்டம் சார்ந்த பகுதிகளில் இவ்விளையாட்டு இன்றும் ஆர்வமாக நிகழ்த்தப்படுகிறது. பண்பாட்டுத் திருவிழாவாகவும், மக்களின் சமயம் சார்ந்த திருவிழாவாகவும், இளைஞர்களின் வீர உணர்வை நினைவுகூரும் விழாவாகவும் நடைபெறும் ஏறுதழுவுதல் பற்றி இலக்கியங்களில் இடம்பெறும் செய்திகளை இங்கு நோக்குவோம். பழந்தமிழ் நூலான கலித்தொகையின் முல்லைக்கலியில் இடம்பெறும் பாடல்களில் ஏறுதழுவுதல் சிறப்பாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. மலைபடுகடாம் நூலிலும் (330-335), பட்டினப்பாலையிலும், சிலப்பதிகாரத்திலும் ஏறு தழுவுதல் பற்றிய பல குறிப்புகள் உள்ளன. குறிஞ்சி நில மக்களும் முல்லைநில மக்களும் தங்கள் ந

காமெரூன் மக்கள் பேசும் மொழி தமிழ்..!

Image

தமிழருடைய பாரம்பரிய நெல் விதைகள் சேகரிப்பு தொழில்நுட்பம்!

Image
இதன் பெயர் கோட்டை, விதைகளை வைக்கோளால் கட்டி அடுத்த நாள் நாட்டுப்பசு சாணியால் மெழுகி வைத்துவிடுவர்.  ஒரு வருடத்திற்கு ஒன்றுமே ஆகாது.  மேலும் திரும்ப முளைப்பதற்கான தட்ப வெட்பம் இதில் பேணப்படுகிறது. இன்றும் பல கிராமங்களில் இம்முறை கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. தமிழரின் தனித்துவமான அறிவியலை அனைவருக்கும் அறியப்படுத்துவோம்.  நன்றி - இராஜன் நெல்லை Credit :  https://www.facebook.com/WeAreTamils/photos/a.1670639599892391.1073741828.1670638019892549/1741311252825225/?type=3

ஸ்ரீ காஞ்சி கைலாசநாதர் கோயில்

Image
கி.பி.(700-720) 7 ஆம் நூற்றாண்டை சேர்ந்த கோயில் பல்லவ மன்னன் ராஜசிம்மனால் கட்டப்பட்டது. தமிழ் நாட்டின் முதல் கருவறைமேல் விமானம் தாங்கிய கோயில் பல்லவர்கள் குடவரைகோயில்கள் வடிவத்திலிருந்து மாறி புதியவடிவத்தை கண்டுபிடித்தனர், அதுதான் மணற்கற்கல்(sand stone). இந்த கோயில் முழுவதும் மணற்கற்களால் மட்டுமே கட்டப்பட்டதுள்ளது. இந்த கோயிலை பார்த்தப்பிறகுதான் இராஜராஜ சோழன் தஞ்சை பெரிய கோயிலை கட்டியதாக வரலாறு கூறுகிறது. இக்கோயிலில் நான்கு வகையான கல்வெட்டு எழுத்துகள் உள்ளன 1.நாகரி எழுத்து 2.கிரந்தம் எழுத்து 3.நன்குஅலங்கரிக்கப்பட்டகிரந்தம் எழுத்து 4.பூ வேலைப்பாடு கொண்ட கிரந்தம் எழுத்து பல்லவ மன்னன்ர்கள், சோழ மன்னன்ர்கள், விஜயநகர மன்னன்ர்கள், முகாலாய மன்னன்ர்கள் யாருமே இந்த கோயிலை சேதபடுத்தவில்லை. எங்கு பார்த்தாளும் பிரமிப்பு. வாழ்க்கையில் ஒருமுரையேனும் ஸ்ரீ காஞ்சி கைலாசநாதர் கோயில் வந்துபாருங்கள். -அறம் கிருஷ்ணன் #Credit :  https://www.facebook.com/tamilnationality/

உலகில் மதங்கள்

Image
இந்து, கிறீஸ்தவ, பௌத்த, இஸ்லாமிய, சமண, யூத மதங்கள் உருவாகிய விதங்கள் பற்றி ஒரு சில வரிகளில் அறிவோம்... இந்து மதம்: இந்தியாவில் காலம் காலமாகப் பலவிதமான தெய்வங்களை, வேறு வேறு சமயப் பெயர்களுடன் வணங்கி வந்தவிடத்து, பிற்காலத்தில் இத்தெய்வங்களிடையே மாமன், மாமி, கணவன், மனைவி, அண்ணன், தங்கை எனப் பல உறவுமுறைகளை உருவாக்கி, அந்தப் பொதுவான அமைப்பினை இந்து மதம் என்று அழைக்கலாயினர். அச்சமயங்களில் முதன்மையாய் நின்றிருந்தது சைவ சமயமாகும். சைவ சமயத்தைச் ஸ்தாபித்தவர் என்று ஒருவரும் இலர். ஒரு 5, 6 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே தோன்றி இருக்காலாம். கி.மு.2500-1500 ஆண்டு காலத்தில் இருந்த சிந்து வெளி நாகரிக காலத்திலேயே சிவலிங்க வழிபாட்டை ஒத்த வழிபாட்டு முறைகள் இருந்திருக்கின்றன. கி.மு.1500-500 களில் வேதங்கள் எழுதப்பட்டன. பின்னர், கி.மு.500-கி.பி.500 களில்புராண இதிகாசங்கள் இயற்றப்பட்டன. கி.பி. 500-1500 புராணங்கள் பாடப்பட்டன. இச்சமயத்தை வளர்த்தவர்கள் ரிஷிகள், சமய குரவர்கள், ஆழ்வார்கள் என்று பலர் இருந்தனர். இறைவன் ஆதியும், அந்தமும் இல்லாதவர், உருவமோ, அருவமோ அற்றவர். எங்கும் நிறைந்தவர், எல்லாமாயே இருப்பவர

சுயத்தை இழந்த இந்தியம்.

Image
மொஹமத் கஜினி இந்தியாவின் மீது தொடர்ந்து 18 முறை படை எடுத்தான் என்பதை நாம் பெருமையாக வரலாற்று நூல்களில் படிக்கிறோம். போஜ தேவர் என்கிற மன்னர் மொஹமத் கஜினியை தொடர்ந்து 17 முறை தோற்கடித்தார். அதை பற்றி நாம் யாருமே பேசுவது இல்லை. ஜெப்பான் சாமுராய் வீரர்களை பற்றி நாம் மிக பெருமையாக பேசுகிறோம். ஆனால்? ஜெப்பான் சாமுராய் வீரர்களின் முன்னோடிகளாக இருந்தது ராஜேந்திர சோழனின் வாள் முதுகு படை. ஆம். ராஜேந்திர சோழனின் படை மலேசியா, சிங்கப்பூர், ஜெப்பான் வரை ஆதிக்கம் செலுத்தியது. ராஜேந்திர சோழனும், அலெக்சாண்டரை விட மிகப்பெரிய நிலபரப்பை ஆண்ட செங்கிச்கானும் சம காலத்தவர்கள். ராஜேந்திர சோழன், செங்கிஸ்கான் இருவரும் ஒருவருக்கொருவர் மோதி கொண்டிருந்தால் வரலாறே மாறி போய் இருக்கும். செங்கிஸ்கான் வசம் இருந்த ஐரோப்பிய நாடுகள் அனைத்தும் ராஜேந்திர சோழனின் காலடிக்கு வந்து இருக்கும். ராஜேந்திர சோழனின் படையில் இருந்த ராணுவ வீரர்கள் எவ்ளவு? பேர் தெரியுமா. 9 லக்ஷம் பேர். அன்றைய கால கட்டத்தில். அன்றைய மக்கள் தொகையில் எந்த மன்னரின் படையிலுமே இவ்வளவு ராணுவ வீரர்கள் இருந்ததில்லை. Umayyad Caliphate என்கிற சாம்ரா

படிக்காத மேதை

Image
காமராஜர் ஒரு முறை ஒரு கலெக்டரை அழைத்து இருந்தார்.. உரையாடலுக்கிடையே தேநீர் வந்தது.. டீயக் குடிங்கன்னேன்.. என்றார் காமராஜர்.. தேநீரைப் பருக சில நிமிடங்கள் தயக்கம் காட்டினார் அந்த கலெக்டர்.. உடனே காமராஜர் அவரது டீக்கோப்பையை அருகில் சென்று பார்த்தார். அதில் ஈ ஒன்று விழுந்து துடித்துக் கொண்டு இருந்தது... ஈயை கையில் எடுத்து வெளியே பறக்க விட்டார் காமராஜர்... பிறகு கலெக்டரிடம்... "...டீயைக் குடிப்பதா வேண்டாமான்னு யோசித்த நீங்க.. அந்த ஈயைப் பத்தி நினைக்கலையே... உங்களுக்கு டீ தான் பிரச்சனை.... ஆனா அந்த ஈக்கு..? வாழ்வா சாவா-ங்கறது பிரச்சனை.... இப்படி உங்க சைடுல இருந்து மட்டுமே நீங்க சிந்திச்சு செயல்பட்டா... மக்களோட சைடுலே எப்படி சிந்திப்பீங்க..??.."­ கலெக்டர் தலை குனிந்தார்... படிக்காத மேதை... Credit :  https://www.facebook.com/photo.php?fbid=572185629619219&set=gm.582897088561837&type=3

தமிழனுக்கே தெரியாத தமிழ் வரலாறு

Image

ஆமை சொல்லும் இரகசியம்

Image
தமிழகத்தில் 79 கோயில்களில் கடல் ஆமை சிற்பங்கள் உள்ளன. இதன் அர்த்தம் என்ன தெரியுமா? பர்மாவில் தேக்கு மரத்தை வெட்டி நீங்கள் கடலில் போட்டால் அது எங்கு போய் சேரும் தெரியுமா? தனுஷ்கோடிக்கு. ஆம். அது தமிழன் கண்டறிந்த தொழில் நுட்பம்! தன் நுண்ணறிவால் நீரோட்டத்தை பயன்படுத்தி தமிழன் செய்த சாதனைகள் நிறைய. கடல் ஆமைகள் கடலில் இருக்கும் நீராட்டத்தை பயன்படுத்தி 150 கி.மீ வரை மிதந்தபடி சுலபமாக பல இடங்களையும் சென்றடைந்தன. இதை கவனித்த நம் தமிழன் கப்பல் போக்குவரத்தை நீரின் ஓட்டத்தை பயன்படுத்தி செலுத்த துவங்கினான். இதனால் அவன் 20,000 க்கும் மேற்பட்ட கடல் தீவுகளை கண்டறிந்தான். இதுவரை எந்த நாட்டின் கடல்படையும் போகமுடியாத பல இடங்களை துறைமுகங்களை கண்டறிந்தான்! மத்திய தரைக்கடல், தென்ப்கிழக்கு ஆசிய நாடுகளில் பல வியாபாரம் புரிந்து பெரும் வெற்றி அடைந்தான். பல நாடுகளையும் கைப்பற்றினான். கடலில் பாறைகளில் கப்பல் மோதினால் அதன் முன்பகுதியை அப்படியே கழற்றிவிடும் தொழில் நுட்பம் தமிழன் மட்டும்தான் பயன்படுத்தினான். பிற்காலத்தில் ஐரோப்பியர்கள் நம்மிடம் கற்றுக்கொண்டனர். உலகில் பிரேசில், ஜப்பான், சீனா, ஆஸ்திரேலியா, கொ

இன்றைய தமிழர்களின் வாழ்வில் தாய்மொழியின் முக்கியத்துவத்தை அதிகரிக்கும் வழிகள்.

Image
இன்றைய தமிழர்களின் வாழ்வில் தாய்மொழிக்கு கொடுக்கப்படும் முக்கியத்துவம் என்ன ? அதனை அதிகரிக்க என்னென்ன வழிமுறைகளைக் கையாளலாம் ? முன்னுரை : தமிழ் மொழி உலகிலயே மிக தொன்மையான மொழிகளில் ஒன்று என்பது நாம் அனைவரும் அறிந்தது. நாகரிகம் தோன்றி இரண்டாயிரம் வருடங்கள் தான் ஆன போதிலும் , இருபதாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே தோன்றியது தமிழ்மொழி என்கிறார்கள் ஆராய்ச்சியாளர்கள் . உலகில் முதன்முதலாக பேசப்பட்ட மொழி நம் " தமிழ் மொழி " தான் என்று சமிபத்திய ஆராய்ச்சியில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது . தமிழ் உலகமொழி மட்டுமல்ல , உலக மொழிகளுக்கெல்லாம் தாய் மொழி நம் தமிழ்மொழி தான். செம்மொழியான தமிழ்மொழியின் சிறப்புகளையும் அவை எவ்வாறு குறைந்தது என்பதையும் காண்போம். குமரிக்கண்டம் : குமரிக்கண்டத்தில் தான் உலகின் முதல் மாந்தன் பிறந்ததாக ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர். இங்கு தான் தமிழ் மொழியும் பிறந்துள்ளது. இன்று தனி நாடுகளாக இருக்கும் ஆஸ்திரேலியா , தென் ஆப்ரிக்க, இலங்கை மற்றும் பல தீவுகள் எல்லாம் சேர்ந்து பிரம்மாண்டமாக இருந்த இந்த குமரிக்கண்டம் , இன்று கடலுக்கடியில் அமைதியாக உறங்கிக்கொண்டிருகிறது