சுயத்தை இழந்த இந்தியம்.




மொஹமத் கஜினி இந்தியாவின் மீது தொடர்ந்து 18 முறை படை எடுத்தான் என்பதை நாம் பெருமையாக வரலாற்று நூல்களில் படிக்கிறோம். போஜ தேவர் என்கிற மன்னர் மொஹமத் கஜினியை தொடர்ந்து 17 முறை தோற்கடித்தார். அதை பற்றி நாம் யாருமே பேசுவது இல்லை.

ஜெப்பான் சாமுராய் வீரர்களை பற்றி நாம் மிக பெருமையாக பேசுகிறோம். ஆனால்? ஜெப்பான் சாமுராய் வீரர்களின் முன்னோடிகளாக இருந்தது ராஜேந்திர சோழனின் வாள் முதுகு படை.

ஆம். ராஜேந்திர சோழனின் படை மலேசியா, சிங்கப்பூர், ஜெப்பான் வரை ஆதிக்கம் செலுத்தியது. ராஜேந்திர சோழனும், அலெக்சாண்டரை விட மிகப்பெரிய நிலபரப்பை ஆண்ட செங்கிச்கானும் சம காலத்தவர்கள். ராஜேந்திர சோழன், செங்கிஸ்கான் இருவரும் ஒருவருக்கொருவர் மோதி கொண்டிருந்தால் வரலாறே மாறி போய் இருக்கும். செங்கிஸ்கான் வசம் இருந்த ஐரோப்பிய நாடுகள் அனைத்தும் ராஜேந்திர சோழனின் காலடிக்கு வந்து இருக்கும்.

ராஜேந்திர சோழனின் படையில் இருந்த ராணுவ வீரர்கள் எவ்ளவு? பேர் தெரியுமா.

9 லக்ஷம் பேர். அன்றைய கால கட்டத்தில். அன்றைய மக்கள் தொகையில் எந்த மன்னரின் படையிலுமே இவ்வளவு ராணுவ வீரர்கள் இருந்ததில்லை.

Umayyad Caliphate என்கிற சாம்ராஜ்யம். செங்கிஸ்கானின் மங்கோல் சாம்ராஜ்யத்திற்கு அடுத்தபடியாக உலகின் மிகப்பெரிய நிலபரப்பை ஆண்ட சாம்ராஜ்யம். மொஹமத் நபி அவர்களின் மறைவுக்கு பின் உலகம் முழுவதும் இஸ்லாமிய சாம்ராஜ்யத்தை நிறுவ ஆட்சிக்கு வந்த கலிபாக்களே இவர்கள்.

மொஹமத் நபி மறைவுக்கு பின் கலிபாக்களின் சாம்ராஜ்யம் என்பது உதயம் ஆகியது. Muawiyah என்கிற மன்னன் தான் Umayyad Caliphate சாம்ராஜ்யத்தை கிபி 661 இல் நிறுவியது.

ஆப்கானிஸ்தான், ஈரான், ஈராக், குவைத், ஈஜிப்த் முதலான நாடுகளில் ஆரம்பித்து. பிரான்ஸ், இத்தாலி, இங்கிலாந்த் முதல். அவ்ளவு ஏன்?

அமெரிக்கா, இங்கிலாந்தே அன்று முதல் இன்று வரை பார்த்து மிரளும் நாடு ரஷ்யா. உலக வீரர்களில் நம்பர் 1 என்று சொல்லப்படும் செங்கிச்கானே தொட பயந்த நாடு ரஷ்யா. அத்தகைய ரஷ்யாவையே தொட்டு பார்த்தவர்கள் இந்த கலிபாக்கள். கலிபாக்களை ஒப்பிடும் பொழுது. முகல் சாம்ராஜ்யம் ஜிஜூபி. அன்றைய உலக மக்கள் தொகையில் 29 சதவீதம் கலிபாக்கள் வசம் இருந்தது. ஒரு கோடியே 50 லக்ஷம் கிலோ மீட்டர் நிலபரப்பை ஆண்ட சாம்ராஜ்யம் இந்த கலிபாக்களின் சாம்ராஜ்யம்.

கிபி 661 இல் துவங்கி. 29 சதவீத உலக மக்களை ஆண்ட இந்த கலிபா சாம்ராஜ்யத்தற்கு ஒரு முற்றுபுள்ளி வைத்த இந்திய மாமன்னர் யார்? தெரியுமா. கிபி 713 இல் இன்றைய ராஜஸ்தான் மாநிலத்தில் அவதாரம் செய்த மாமன்னர் பப்பா ராவல். 740 களில் அன்றைய கலிபா மன்னன் Muhammad Bin Quasm ஐரோப்பிய நாடுகளான பிரான்ஸ், இத்தாலி முதலான நாடுகளையே மண்டியிட வைத்த திமிரில் இந்தியாவின் மீது படை எடுத்து வந்தான்.

தாஹிர் சிங் என்கிற ஒரு மன்னரை முதலில் வென்றான். இந்தியாவில் அவன் பெற்ற முதல் வெற்றி அது. அதன் பின் அவன் ராஜஸ்தான் மீது படை எடுத்து வந்தான். ஒரு லக்ஷதிற்கும் மேற்பட்ட கலிபா படையை 40 ஆயிரம் வீரர்களை மட்டுமே கொண்ட பப்பா ராவலின் படை மிக எளிதாக வெற்றி கொண்டது. பின்னர் பப்பா ராவல் அவர்கள் அரேபிய மன்னர்களுக்கு தொடர்ந்து அடிமேல் அடி கொடுக்க ஆரம்பித்தார்.

அவரோடு அன்று தென் இந்தியாவில் மிகப்பெரிய சக்ரவர்த்தியாக இருந்த புலகேசி. [ புலிகேசி கிடையாது] விக்ரமாதித்யா2 முதலான மற்ற இந்திய மன்னர்களும் கை கோர்த்தனர். பப்பா ராவல் என்கிற ஒருவர் அன்று இல்லாமல் இருந்து இருந்தால். எட்டாம் நூற்றாண்டிலேயே அரேபியர்கள் இந்தியாவின் பெரும் பகுதியை கைப்பற்றி இருப்பார்கள். தீவிர சிவபக்தரான பப்பா ராவல். ஹரித தேவ் என்கிற மிகப்பெரிய யோகியின் சீடர். சிவனின் நேரடி தரிசனத்தை பப்பா ராவல் அவர்கள் பெற்றார் என்று இவரின் வரலாறு சொல்கிறது.

எட்டாம் நூற்றாண்டில் பப்பா ராவல் அவர்கள் ஈசனுக்கு மார்பிளால் மிக பிருமாண்டமான ஏக லிங்கேச்வர் கற் கோவிலை உதைபூரில் எழுப்பினார். அதே போல் விஷ்ணுவிற்கு. உதைபூரில் இருந்து 23 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள நாக்தாவில் சஹஸ்த்ர பாஹு என்கிற கோவிலை கட்டினார். ராஜஸ்தானில் மேவாட் என்கிற புதிய சாம்ராஜ்யத்தை தோற்றுவித்த மன்னரும் இவரே. சூரிய தேவன் தான் மேவாட் சாம்ராஜ்யத்தின் சின்னம்.

97 வயது வரை பப்பா ராவல் அவர்கள் வாழ்ந்தார். காரணம் இன்றி நாடு பிடிக்கும் ஆசையில் பப்பா ராவல் எந்த சமஸ்தானத்தின் மீதும் படை எடுத்ததில்லை. அதே சமயத்தில் தனது சாம்ராஜ்யத்தின் மீதோ. அல்லது உமையாத் போல் அந்நியர்கள் இந்தியாவில் எந்த சாம்ராஜ்யத்தின் மீது படை எடுத்தாலும் பப்பா ராவல் அந்த அந்நியர்களை நிர்மூலம் ஆக்காமல் விட மாட்டார்.

பப்பா ராவல் காலத்துக்கு பின். தொடர்ந்து 500 ஆண்டுகள் அரேபிய மன்னர்களால் இந்தியாவில் காலே வைக்க முடியவில்லை. இத்தகைய வீரம் மிகுந்த இந்தியாவை பின்னர் முகமத் கோரி என்கிற ஒரு அடிமை வென்று. அந்த வெற்றியை கொண்டாடும் விதமாக அவன் Qutub Minar என்னும் வெற்றி சின்னத்தையும் இன்றைய இந்திய தலைநகர் டெல்லியில் கட்டி விட்டு போய் விட்டான். இந்த கேவலம் எதனால்? நடந்தது. அலெக்சாண்டர் பாபிலோனில் இறந்த பின்.

அவன் தளபதி செலூசியஸ் நிக்கேடர் இந்தியா மீது படை எடுத்து வந்தான். அலெக்சாண்டரின் அந்த படையையே. சந்திர குப்த மௌரியா படை வென்றது. Umayyad Caliphate படையையே பப்பா ராவலின் படை வென்றது. ஜெப்பான் வரை ராஜேந்திர சோழனின் கோல் ஆதிக்கம் செலுத்தியது. மூவாயிரம், நாலாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே இது போன்ற பல மாவீரர்களும், பல விஞ்ஞானிகளும் அதிகமாக வாழ்ந்த ஒரே தேசம் உலகினில் இந்திய தேசம் மட்டுமே.

அத்தகைய இந்த இந்திய தேசத்தை பல அந்நியர்கள் அடிமைபடுத்தி ஆண்டதற்கு ஒரே காரணம். நாம் நமது சுயத்தை இழந்ததால் மட்டுமே. இந்தியர்களுக்கு Physical Fitness கிடையாது என்று யாராவது என்னிடம் சொல்லும் பொழுது அவ்வாறு சொல்பவனின் காது ஜவ்வில் ஓங்கி அரைய வேண்டும் போல் எனக்கு தோன்றும். மனதளவில் பலவீனம் அடைந்த இதுபோன்ற பல கோடி கோழை இந்தியர்கள் இந்த மண்ணில் வாழ்வதால் தான் நமது தேசம் உருப்படமால் இருக்கிறது. சொந்த வரலாற்றை இழந்த ஒரு தேசம் எவ்வாறு? புதிய வரலாறை படைக்க முடியும்.

#Credit : https://www.facebook.com/groups/siddhar.science/permalink/1184706261579786/

Comments

Popular posts from this blog

இன்றைய தமிழர்களின் வாழ்வில் தாய்மொழியின் முக்கியத்துவத்தை அதிகரிக்கும் வழிகள்.

இலங்கை பூர்வகுடி தமிழர்கள்...

உலகில் மதங்கள்